இலங்கை

கார் விபத்தில் 5 வயது சிறுவன் பரிதாபச் சாவு!

Published

on

திருகோணமலை – ஹொரவப்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

அத்துடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

நேற்றிரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்ததுடன், 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களில் உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகியோருடன் மேலும் ஒருவரும், மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அத்துடன் 4 பேர் மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version