அரசியல்

புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது! – சபையில் விமல்

Published

on

” புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது. மக்களும் ஏற்கமாட்டார்கள். எனவே, பிரதமர் உடனடியாக பதவி விலகி, புதிய அரசு உருவாக இடமளிக்க வேண்டும்.” – என்று விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அமைச்சரவையை நியமிப்பதால் பிரச்சினை தீராது. பிரதமர் உடன் பதவி விலக வேண்டும். சர்வக்கட்சி இடைக்கால அரசு அமையப்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த அரசியல் நெருக்கடி தீராது.

என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கினர். அப்போது மூத்த உறுப்பினர்கள் மௌனம் காத்தனர். கர்மவினை அவர்களை விடவில்லை .இன்று பதவிகள் இன்றி பின்வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். பஸில் ராஜபக்ச என்பவர் எல்லாவற்றையும் சீரழித்துவிட்டார்.” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version