அரசியல்

நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க! – 22இல் கூடுகின்றது மு.காவின் உயர்பீடம்

Published

on

“முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்குப் போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நஸீர் அஹமட் எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட 4 உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டமையானது மிகவும் அசிங்கமானது.

கட்சியின் உயர்பீடம் எதிர்வரும் 22ஆம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஒன்றுகூடி, நஸீர் அஹமட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version