அரசியல்

போராட்டத்தைச் சீர்குலைக்க முயன்றால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்! – சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

Published

on

“மக்களின் அமைதியான போராட்டத்தைச் சீர்குலைக்கும் அரசின் முயற்சி நாட்டுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.”

– இவ்வாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இன்று 8 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது. இந்நிலையில், காலிமுகத்திடல் பகுதியில் இன்று காலை திடீரென பொலிஸ் கனரக வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்தன. அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்தச் சம்பவத்தை அறிக்கை மூலம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.

கடுமையான கண்டனங்கள் எழுந்ததையடுத்து பொலிஸ் கனரக வாகனங்கள் அங்கிருந்து முழுமையாக அகற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version