இலங்கை

ஜெனரேட்டர் வெடித்து தாயும் மகளும் பரிதாப மரணம்!

Published

on

ஜெனரேட்டர் வெடித்து தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

வெலிமடை – கெப்பட்டிப்பொல பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின்வெட்டுக் காரணமாகப் பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையால் 38 வயதான தாயும், அவரின் 9 வயதான மகளும், 4 வயதான மகனும் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிறார்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், சிறுமியும், தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் மேலும் கூறினர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version