இந்தியா

இந்தியாவிடமிருந்து மேலும் 2 பில்லியன் கடன்!

Published

on

மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் சர்வதேச செய்தி சேவைக்கு இந்திய உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

இலங்கை தற்போது உணவு மற்றும் எரிபொருள் உட்பட பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க தயாராகவுள்ளோம் – என்றார்.

நெருக்கடி நிலையை சமாளிக்க இந்தியா, சீனா உட்பட அயல்நாடுகளிடம் இலங்கை கடன்பெற்றுள்ள நிலையில், மீண்டும் கடன் வழங்குமாறு கோரியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்க முன்வந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version