அரசியல்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இத்தாலிக்கு!!

Published

on

ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடுகள் நிமித்தம் இத்தாலிக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஏற்பாடுகளை மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் ஆகியோர் செய்து வருவதாக அறியமுடிகிறது.

இது தொடர்பில் பங்குத்தந்தை ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

புனித செபாஸ்டியன் தேவாலயம், புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் சியோன் தேவாலயம் ஆகியவற்றில் இருந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இத்தாலி விஜயத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும் வெடிப்புச் சம்பவங்களின் விளைவாக ஊனமுற்றவர்களைக் கொண்டுசெல்லும் திறன் குறித்து கவலைகள் உள்ளன. இந்த நபர்களுக்கு ஒரு பராமரிப்பாளர் தேவை. எனவே, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் உள்ளன.என்றார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version