அரசியல்

கோட்டாவுக்கு எதிராக 5ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

Published

on

ஒரே நோக்கத்துக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் ஓரணியாக கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அணிதிரண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக 5 நாட்களாக இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி மற்றும் அரசைப் பதவி விலகுமாறு கோரியே இந்தத் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அரசுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version