அரசியல்

ஈஸ்டர் பின்னணியில் அரசின் சூழ்ச்சி!! – பேராயர் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது பாதுகாப்பு அமைச்சு

Published

on

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் தற்போதைய அரசின் சூழ்ச்சி இருந்துள்ளது.” என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு நிராகரிப்பு செய்தார்.

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் இவ்வாறான அறிவிப்பை வெளியிடுகின்றார் என தெரியவில்லை. அது தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்குமாறுதான் எம்மால் கோரமுடியும். அவரின் பதவி நிலையை நாம் மதிக்கின்றோம்.

தற்போது பொலிஸ் காவலில் உள்ள நௌபர் மௌலவி என்பவரே, ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை இலங்கைக்கு கொண்டுவந்தார். ” – என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version