இலங்கை

தென் கடலில் 325 கிலோ போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது!

Published

on

தென் கடற்பரப்பில் பெருமளவு போதைப்பொருட்களுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுப் பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகில் 300 கிலோகிராம் ஹெரோயினும், 25 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும் உள்ளன என்று சந்தேகிக்கப்படுகின்றது.

படகில் இருந்த 6 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version