அரசியல்

கோட்டாவுடன் இனி எந்த உறவும் கிடையாது! – நாம் மக்கள் பக்கமே என்கிறார் மைத்திரி

Published

on

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் எமக்கு இனி எவ்வித உறவும் கிடையாது. ராஜபக்சக்கள் வேண்டாம் என போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.

” அரசுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் சாந்த பண்டார என்னிடம் எதுவும் கலந்துரையாடவில்லை. ஏன்! தொலைபேசி வாயிலாகக்கூட உரையாற்றவில்லை. தனது அரசியல் வாழ்க்கையை அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார்.

ராஜபக்சக்களுடன் எமக்கு இனி தொடர்பு – உறவு கிடையாது. கடிதம் அனுப்பினோம், யோசனைகளை முன்வைத்தோம். ஆனால் மாறுவதாக தெரியவில்லை.

எனவே, ராஜபக்சக்களை வெளியேற கோரி போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம். ” – என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version