அரசியல்

ஈஸ்டர் தாக்குதல்! – இதுவரை 735 பேர் கைது என்கிறார் கமல் குணரத்ன

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன – என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய வகையில் விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம். இதுவரை உரிய வகையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இனியும் முன்னெடுக்கப்படும்.

இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 196 பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 81 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பரந்துபட்ட விசாரணை முன்னெடுக்கப்படுவருகின்றது.” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version