அரசியல்

பிற்போடப்பட்டது அமைச்சரவை பதவியேற்பு!

Published

on

இன்று நடைபெறவிருந்த அமைச்சரவை பதவியேற்பு பிற்போடப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் ஓரிருவர் இன்று மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியது.

ரோஹித அபேகுணவர்தன, பவித்ராதேவி வன்னியாராச்சி, காமினி லொக்குவே மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோரே இவ்வாறு பதவியேற்கவுள்ளனர் எனவும் கூறப்பட்டது. து.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பிரதமர் தவிர ஏனைய அனைவரும் அண்மையில் பதவி துறந்தனர்.

அதன்பின்னர் தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பீரிஸ், அலிசப்ரி ஆகிய நால்வருக்கு மட்டும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையிலேயே மேலும் சிலருக்கு இன்று அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில் இன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்படவிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version