அரசியல்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை! – தேசிய சுதந்திர முன்னணி

Published

on

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை என்று விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர எம்.பி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது நாட்டை மேலும் சீர்குலைக்கும் எனவும், நாட்டை சீர்குலைக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் 11 கட்சிகளின் கூட்டணி கட்சிகள் உடன்பட போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்க பிரேரணை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சி கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தது.

இதன்படி, அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள 41 ஆளும் தரப்பு எம்.பிகளின் ஆதரவை பெற எதிரணி முயன்றுவரும் நிலையில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள 11 கட்சிகளின் கூட்டணி ஆதரவுவழங்க மறுத்துள்ளது என அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version