அரசியல்

தமிழர்களுக்கு செய்த கொடுமையே ஆட்சியாளர்களுக்கு சாபக்கேடாக மாறியுள்ளது!

Published

on

73 வருடமாக தமிழ் மக்களுக்கு செய்த கொடுமை, தற்போது சிங்கள ஆட்சியாளர்களுக்கு சாபமாக மாறிவிட்டது. – இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்காக வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் கைவிடப்பட்டு 13 வருடங்கள் ஆன நிலையிலும், தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

தமிழ் மக்களுக்கு விளைவித்த பாவமே தற்போது சாபக்கேடாக மாறி இந்த ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் நிலையை உருவாகி உள்ளது.

யார் நாட்டை ஆட்சி செய்தாலும் நமக்கு பிரச்சினை இல்லை. தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து அடிப்படை உரிமையினை பெற்று தருவதையே நாம் கேட்கின்றோம்.

ஆனால் நாட்டு மக்கள் வறுமைக்குள் சிக்குண்டு அழிவடைந்தாலும் பிரச்சனை இல்லை. தாம் ஆட்சியை விட்டு விலகப்போவதில்லை என்று அரசாங்கம் விடாப்பிடியாக உள்ளது – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version