அரசியல்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முழு ஆதரவு! – சுமந்திரன் தெரிவிப்பு

Published

on

அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

” ஜனாதிபதியை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் கோருகின்றனர். அவர் அந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. எனவே, இதற்கு எதிராக அரசமைப்பு ரீதியிலாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஒன்று அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை. அடுத்தது ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை.” – என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version