அரசியல்

ஜனாதிபதி பதவி விலகமாட்டார்! – ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகமாட்டார். தற்போதைய நெருக்கடி நிலைமையை நாம் எதிர்கொள்வோம் – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிரணி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்லவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கோ ஹோம் கோட்டா என சிலர் கோஷம் எழும்புகின்றனர். ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை உள்ளது. அவர் பதவி விலகமாட்டார்.

அத்துடன், வன்முறையை தூண்ட வேண்டாம். நாடு இக்கட்டமான கட்டத்தில் உள்ளது.” – என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version