அரசியல்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்!
பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர்.
கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பொலிஸார் கலைத்தனர்.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராதனை – கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாகச் செல்ல முற்பட்டபோது பொலிஸாரால் இவ்வாறு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊரடங்கு உத்தரவை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் அதற்கு எதிராகத் தாம் நடவடிக்கைகளை எடுத்தனர் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login