அரசியல்
முடக்கப்பட்ட சகல சமூக வலைத்தளங்களும் வழமைக்கு!
இலங்கையில் முடக்கப்பட்டுள்ள சகல சமூக வலைத்தளங்களும் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்றிரவு முதல் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கமைய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை, சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதைத் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று காலை தெரிவித்திருந்தார்.
You must be logged in to post a comment Login