அரசியல்

யாழின் தீவுகளில் இந்திய உதவியுடன் மின் உற்பத்தி!

Published

on

யாழ்ப்பாணத்தில் 3 தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமான மின் உற்பத்தி திட்டத்துக்கு இந்தியா 75 வீத நிதியுதவியை வழங்குகின்றது.

அதனை 85 வீதம்வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் – என்று மின்சக்தி அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” முன்னதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின்கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. எனினும், இந்தியாவிடம் இருந்து 75 வீத நிதி மானியமாக இத் திட்டத்துக்கு கிடைக்கின்றது.” – என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version