அரசியல்

ஏப்ரல் 03 போராட்டத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை! – ஜே.வி.பி. அறிவிப்பு

Published

on

” ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தின் பின்புலம் என்னவென்று தெரியவில்லை, அதனை ஏற்பாடு செய்வது யாரென்றும் தெரியவில்லை. எனவே, இது தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்.” -இவ்வாறு ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

பொருட்களின் விலையேற்றம், வரிசை நிலைமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 03 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வீதியில் இறங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தன்னெழுச்சி போராட்டம் எனக் கூறப்பட்டாலும், இதனை எற்பாடு செய்வது யாரென தெரியவில்லை. இந்நிலையிலேயே ஜே.வி.பி. இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

” மக்களுக்கு போராடும் உரிமை இருக்கின்றது. எனினும், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தலையிட தலைமைத்துவம் வேண்டும்.” எனவும் அக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, இப் போராட்டத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என 11 கட்சிகளின் கூட்டு அறிவித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version