அரசியல்

தேசிய அரசும் இல்லை; புதிய பிரதமரும் இல்லை! – வதந்தியை நம்பாதீர் என்கிறார் கோட்டாபய

Published

on

“எமது அரசு தொடர்ந்தும் பயணிக்கும். தேசிய அரசு அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை. பிரதமரை மாற்றும் யோசனையும் எமக்கு இல்லை. சிலரால் திட்டமிட்டு வெளியிடப்படும் வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம்.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த நல்லாட்சி அரசால் – தேசிய அரசால்தான் நாடு இந்தளவு நெருக்கடியைச் சத்துள்ளது. இந்நிலையில், மீண்டுமொரு தேசிய அரசு எதற்கு?

எமது அரசு பெரும்பான்மைப் பலத்துடன் இன்னமும் இருக்கின்றது. அரசைக் கவிழ்க்கச் சதி செய்வோர் தொடர்பில் நாம் கவனம் எடுத்துள்ளோம். அவர்களின் கனவு ஒருபோதும் நனவாகாது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை விரைவில் முடிவுக்கு வரும்” – என்றார்.

#SriLankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version