அரசியல்

முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்! – மாநாட்டில் பங்குகொள்ளுமாறு அரசு அழைப்பு

Published

on

” சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்ற முடிவை மாற்றி, அந்த மாநாட்டுக்கு எதிரணிகள் வரவேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.”

இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

” அனைத்து விடயங்கள் பற்றியும் பேசுவதற்கு பொருத்தமான இடம் சர்வகட்சி மாநாடாகும்.” – எனவும் அவர் கூறினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version