இலங்கை

வடக்கிலிருந்து ஒரே நாளில் 16 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

Published

on

வடக்கிலிருந்து ஒரே நாளில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தப்பிச் சென்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மன்னாரிலிருந்து 3 படகுகளில் தமிழகம் சென்றுள்ளனர்.

நேற்று ஒரு படகில் புறப்பட்ட 6 பேர் இன்று காலையும், இன்று பகல் இரு படகுகளில் புறப்பட்ட மேலும் 10 பேர் மாலையும் சென்றடைந்துள்ளனர்.

முதல் 6 பேரும் தனுஷ்கோடிக்கு அடுத்த மூன்றாம் மணல் திடலில் தரை இறங்கியுள்ளனர்.

ஏனைய 10 பேரும் இராமேஸ்வரம் – அரிச்சல் முனையிலுள்ள நான்காம் மணல் திடலில் தரை இறங்கியுள்ளனர்.

இவ்வாறு சென்ற 16 பேரில் 3 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவர்கள் தமிழகத்துக்குத் தப்பிச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version