அரசியல்

சர்வகட்சி மாநாடு! – பங்கேற்கமாட்டோம் என்கிறார் அநுரகுமார

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்காதென அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” இந்த அரசுக்கு மக்கள் தொடர்பில் துளியளவும் அக்கறை இல்லை. பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டங்களும் இல்லை.

எனவே, ஏமாற்று வேலையாகவே சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படுகின்றது. அவ்வாறான ஏமாற்று பொறிக்குள் எமது கட்சி சிக்காது.” – என்றும் அநுர திஸாநாயக்க குறிப்பிட்டார்.

#SriLankaNews

1 Comment

  1. Pingback: அநுரவின் கட்சி ரணில் அரசுக்கு ஆதரவு - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version