அரசியல்

மஹிந்த யாழ். விஜயம்! – பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பார்

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றார்.

இதன்போது யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் அவர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அதன்படி நாவற்குழி, ஆரியகுளம், கந்தரோடை, நயினாதீவுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தையும் அவர் தரிசிக்கவுள்ளார்.

இதேவேளை, தென்மராட்சி – மட்டுவில் வண்ணத்திப் பாலத்துக்கு அருகில் உள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிரதமரால் திறந்துவைக்கப்படவுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டு பொருளாதார மத்திய நிலையத்தையும், வர்த்தகத் தொகுதிகளையும் திறந்துவைக்கவுள்ளார்.

மாவட்ட விவசாய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு வசதியாக 30 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையத் தொகுதிகள் மத்திய நிலையத்துடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளன.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version