இலங்கை

15 இலட்சம் பெறுமதியான தங்கநகைகள் அராலியில் திருட்டு!

Published

on

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு அமெரிக்கன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீட்டில் நேற்று 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வீட்டிலுள்ளவர்கள் நேற்றையதினம் (14) உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று பின்னேரம் விட்டிற்கு திரும்பி வந்து பார்த்தவேளை வீட்டின் கதவு திறந்திருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அலுமாரியில் இருந்த நகை களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11 பவுண் தாலிக்கொடி, 1 1/2 பவுண் சங்கிலி என்பன இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#SrilankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version