இலங்கை

பல்கலை ஊழியர்களும் கவனயீர்ப்பில்!!

Published

on

சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து அனைத்து இலங்கை பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களால் நாடுதழுவிய கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

சம்பள அதிகரிப்பில் 15% தாம் இழப்பதாகவும் இதனை நிவர்த்தி செய்து தரும்படி கோரியும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று காலை 10 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.

இதனால் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த மாணவர்களுக்கான பரீட்சைகளும், கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
#SrilankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version