இலங்கை
அங்கஜன் தலைமையில் வலிமேற்கில் திட்ட தெரிவு!!
வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமூக அமைப்புகளுடனான 40 மில்லியன் ரூபா நிதி திட்டங்களுக்கான கலந்துரையாடல் மற்றும் பயனாளிகள் தெரிவுக்கான கடிதம் வழங்கல் என்பன இன்றைய தினம் வலிமேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் பிரேமினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அங்கஜன் ராமநாதன் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது பயனாளிகளுக்கான உதவித் திட்டங்கள் தொடர்பான கடிதமும் வழங்கிவைக்கப்பட்டது.
You must be logged in to post a comment Login