இலங்கை

13ஜ நிராகரிக்கின்ற செயற்பாட்டில் மக்களும் கைகோர்க்க வேண்டும்! – வடமராட்சி பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்பின் தலைவர் இன்பம்

Published

on

இந்தியாவுக்கு சாதகமாக செயற்படுகின்றவர்களுடைய சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். அதற்காக ஒன்றுபட்டு 13ஜ நிராகரிக்கின்ற செயற்பாட்டிற்கு அணிதிரள்வோம் என வடமராட்சி பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்பின் தலைவர் இன்பம் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களால் நிராகரிக்கப்பட்ட மாவை சேனாதிராசா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரால் கையெழுத்திட்டு அனுப்பட்ட ஆவணத்தை ஏற்க முடியாது.

13ஜ நிராகரிக்கின்ற விதமான செயற்பாட்டில் மக்களும் கைகோர்க்க வேண்டும். இல்லையென்றால் நமது தலைவிதி எம்மைவிட்டு கைமாறிச் சென்றுவிடும். அத்துடன் எமது அபிலாசைகள் நிறைவேற்றாத நிலைமைக்கு தள்ளப்படும்.

இந்தியாவுக்கு சாதகமாக செயற்படுகின்றவர்களுடைய சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். அதற்காக ஒன்றுபட்டு 13ஜ நிராகரிக்கின்ற செயற்பாட்டிற்கு அணிதிரள்வோம் – என்றார்.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version