இலங்கை
ஹோட்டல் ஊழியர்களுக்கு கொவிட்!
பெந்தோட்டையில் நட்சத்திர தரப்படுத்தப்பட்ட ஹோட்டலொன்றில் 42 ஊழியர்கள், மூன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உட்பட 45பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்துருவ சுகாதார வைத்திய அதிகாரி இன்று அறிக்கை வௌியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைத்து ஹோட்டல் ஊழியர்களும் மருத்துவ ஆலோசனையின் பேரில் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மற்றும் ஹோட்டலில் பணியாற்றும் ஏனைய ஊழியர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login