இலங்கை

யானையின் தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயம்!

Published

on

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முறாவோடை கிராமத்தினுள் நுழைந்த யானை ஒருவரைத் தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆண் படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;

கிண்ணையடிப் பகுதியைச் சேர்ந்த இருவர் கடலில் மீன்பிடிப்பதற்றாக இன்று (16) அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் கடலை நோக்கி சென்று கொண்டிருந்தபோதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இருவரும் சைக்கில் இருந்து வீழ்ந்ததையடுத்து, ஒருவர் படுகாயமடைந்ததுடன் ஒருவர் அங்கிருந்து தெய்வாதீனமாகத் தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த இருவரும் சென்ற துவிச்சக்கரவண்டியை யானை மிதித்து சேதப்படுத்தியுள்ளதுடன், அந்தப் பகுதி வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இதேவேளை இச்சம்பவத்தின் போது, இதில் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கேசவராசா ததீஸ்கரன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version