இலங்கை

விபத்தில் உயிரிழந்த குழந்தை!!

Published

on

முச்சக்கரவண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 08 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்தது.

பதுளை – பசறை பிரதான வீதியின் ஐந்தாம் கட்டைப் பகுதியில் நேற்று மாலை (13) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியைக் குழந்தையின் தாயே செலுத்தியதாகவும், அவருக்குச் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த குறித்த தாய் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு ஆண் ஆகியோர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version