இலங்கை

பி.பி.ஜயசுந்தரவிற்கு இன்று பிரியாவிடை

Published

on

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து பி.பி.ஜயசுந்தர விலகியுள்ளமையை ஜனாதிபதி ஊடகப் பிரிவானது உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வுடன், அவர் விடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் அண்மையில் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்திருந்தாலும், அதனை ஜனாதிபதி முதலில் நிராகரித்து, பின்னர் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில் இந்த பதவி மாற்றம் இடம்பெற்றுள்ளது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version