இலங்கை

மக்களை வறுத்தெடுக்கும் மாவதிகாரர்களுக்குக் கண்டனம்- ஸ்ரீநேசன்

Published

on

தைப்பொங்கல் விழா தமிழர் பண்பாட்டு விழா அப்பொங்கல் உறவுகட்கு அன்பான வாழ்த்துகள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தனது தை திருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உழுதுண்டு உயிர்காத்த உழவனை தொழுதுண்டு செல்லடாவென்று சொல்வதுதான் அரச கொள்கையா?  சொந்த உழவர்களை வஞ்சித்து எந்த நாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்கிறாய் சொல்!

இரசாயனம் கலந்தால் இங்கு நஞ்சாகும் உணவென்றால் அந்நிய நாட்டரிசிகளில் ஆபத்தான இரசாயனம் கலக்கவே இல்லையா?

நம்முழவர் நட்டமடைய வேண்டும்! அந்நியர் நயமடைய வேண்டும்.
அதுதானா அதிகாரக்கொள்கை! அதுதானா பசுமைப் புரட்சி!

மக்களை வறுத்தெடுக்கும் மாவதிகாரர்களுக்குக் கண்டனங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version