இலங்கை

மின் வெட்டால் பாதிக்கப்படும் பேக்கரி உரிமையாளர்கள்!

Published

on

இலங்கை மின்சார சபையால் நேற்று அறிவிக்கப்பட்ட ஒரு மணித்தியால மின் வெட்டால் பேக்கரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொருட்கள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில் மின்வெட்டு ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளதாக சங்கத்தின் தலைவரான என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

பேக்கரி உரிமையாளர்கள் கடுமையான சுமைக்கு ஆளாகியிருப்பதாகவும், தங்கள் தொழிலைத் தொடர மிகக் குறைந்த ஆதரவைக் கொண்டிருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version