இலங்கை
இரு வெளிநாட்டினர் அதிரடிக் கைது!
விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும், களுத்துறை தெற்கு காவல்துறையினர் கைது செய்து களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதனையடுத்து 10 ஆம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் 21, 23 வயதைக் கொண்டவர்கள் எனக் கூறப்படும் அதேவேளை இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை நடைபெறுகின்றன.
You must be logged in to post a comment Login