இலங்கை

குழந்தைகளுக்கு சத்தான உணவைப் பெற்றோர்களால் வழங்க முடியவில்லை!!

Published

on

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வடைந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையால் பாரிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு, முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரான நிரோஷா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அரிசியின் விலை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.

கடைகளுக்கு கடை பொருட்களின் விலைகள் மாறுபடுகிறது எனவும், அதிகரித்த வாழ்க்கைச் செலவால் குழந்தைகளுக்கு சத்தான உணவை பெற்றோர்களால் வழங்க முடியவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சதொச விற்பனை நிலையங்களில் அரிசி 100 ரூபாவிற்கு கிடைக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த போதிலும், சதொச விற்பனை நிலையங்களில் இறாக்கைகள் பொருட்கள் கிடைக்காமல் வெறுமையாகக் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version