இலங்கை

கிளிநொச்சி- பூநகரி பிரதேச சபையின் பாதீடு வெற்றி!

Published

on

கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு, 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (06) காலை 10 மணியளவில் சபையின் தவிசாளர் சி.சிறீரஞ்சன் தலைமையில் சபை அமர்வு ஆரம்பமானது.

தவிசாளரின் தலைமை உரையினை அடுத்து இவ்வாண்டிற்கான பாதீடு, சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. பாதீடு மீது விவாதம் இடம்பெற்று, பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதனையடுத்து 20 உறுப்பினர்களைக் கொண்டுள்ள குறித்த சபையில் குறித்த பாதீட்டிற்கு 12 உறுப்பினர்கள் ஆதரவாகவும், மூன்று உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இதேவேளை 5 உறுப்பினர்கள் சபைக்கு இன்றைய தினம் சமூகமளிக்காத நிலையில் பாதீடு, 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version