இலங்கை

யாழில் 03வது மலேரியா நோயாளி அடையாளம்!

Published

on

யாழ்ப்பாணத்தில் மூன்றாவது மலேரியா நோயாளி இனங்காணப்பட்டுள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (05) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

யாழ். போதனா வைத்தியசாலையில் குறித்த மூன்றாவது மலேரியா நோயாளி இனங்காணப்பட்டுள்ளார். இவர் ஆப்பிரிக்க நாட்டிற்குச் சென்ற வந்த நிலையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version