இலங்கை

பதில் சொல்ல பயமா? ஊடகவியலாளர்களின் கேள்வியால் கல்வியமைச்சர் சீற்றம்!

Published

on

சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கல்வியமைச்சர் தினேஸ் குணவர்த்தன சீற்றமடைந்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த சுசில் பிரேமஜயந்த போன்ற சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தால் அரசாங்கத்தினால் தொடர்ந்து இயங்க முடியமா என செய்தியாளர்கள் கல்வியமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்களின் இக் கேள்விக்கு சீற்றமடைந்த கல்வியமைச்சர், கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

இருப்பினும் செய்தியாளர்கள் கருத்து தெரிவிக்க அச்சமா என கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். இதனால் அமைச்சர் சீற்றமடைந்தார்.

பிரேமஜயந்த பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் பிரேமஜயந்தவின் அமைச்சில் கல்வியமைச்சர் அவரை சந்தித்தார். கல்வியமைச்சர் சந்திப்பு முடிவடைந்து வெளியேறிய போதே இக் கேள்விகளை ஊடகவியலாளர்கள் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version