இலங்கை

மகிந்த அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா…?

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது. அவர் தொடர்ந்தும் செயற்பாட்டு அரசியலில் இருக்க வேண்டும்.” – என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார் என தகவல்கள் பரப்பட்டுவருகின்றன.

இதன் பின்னணியில் சூழ்ச்சி இருக்கக்கூடும். பிரதமரை வெளியேற்றுவதற்கு சிலர் முற்படக்கூடும். பிரதமர் ஓய்வுபெறுவதாக இருந்தால் எமக்கு அறிவித்துவிட்டே செல்வார். அவர் தற்போது ஓய்வுபெறக்கூடாது. ஜனாதிபதிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.

கட்சி அரசியல்தான் இந்த நாட்டுககு சாபக்கேடு. தன்னை சூழவுள்ள சூழ்ச்சிக்காரர்களை ஜனாதிபதி இனங்காண வேண்டும்.” – என்றார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version