இலங்கை

பொருளாதார பலமிக்க நாட்டைக் கையளிக்கவில்லை: பெரமுன

Published

on

பொருளாதார பலமிக்க நாட்டைத் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கையளித்ததாக எதிர்க்கட்சியால் கூறமுடியாது.

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

கொவிட் வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடாக எமது நாடு முன்னிலை வகிக்கின்றது. பொருளாதார பலத்துடன், நாட்டை கடந்த ஆட்சி ஒப்படைக்கவில்லை. ஏனெனில், அவர்களால் வெற்றிகரமாக நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது. இதனால் மக்களின் ஆணை எமக்குக் கிடைத்தது.

உட்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு மேம்படுத்தினோம், பொருளாதார பலமிக்க நாட்டையே நாம் கையளித்தோம் என்று எதிர்க்கட்சியால் எதனையும் கூறி முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version