இலங்கை

நகைகள் மீது பேராசையால் கொலை செய்தேன்: கைதான பணிப்பெண் வாக்குமூலம்!

Published

on

மட்டக்களப்பு – பார் வீதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமான முறையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சிகரமான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

கொடூரமாக கொல்லப்பட்ட வீட்டு உரிமையாளரின் நகைகளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற பேராசையில் வீட்டு எஜமானியை வெட்டிக் கொலை செய்தேன் என்று கைது செய்யப்பட்டுள்ள குறித்த வீட்டின் பணிப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் அவர் மேற்கண்டவாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவகையில் கைதான இருவரையும், எதிர்வரும் ஜனவரி 04 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version