இலங்கை

பிறந்தநாள் கொண்டாட ஹெலியில் வந்த சிறுப்பிட்டிப் பெண் (படங்கள்)

Published

on

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் சுவாரஸ்ய சம்பவமும் இடம்பெற்றுள்ளது

தனது பிறந்தாள் கொண்டாட்டத்துக்காக பெண் ஒருவர் ஹெலிகொப்ரரில் வந்து சிறுப்பிட்டியில் இறங்கியுள்ளார்.

வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஹெலிகொப்டர் மூலம் அவர் வந்திறங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். குறித்த பெண் தனது பிறந்த நாள் கொண்டாடத்திற்காக ஹெலிகொப்டரில் வந்திறக்குவதைக் ஏராளாமானோர் கூடி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.

இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் சமூகவலைதளவாசிகள் பல்வேறுபட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

நாட்டில் தற்போது விலைவாசிகள் அதிகரித்து, வாழ்க்கையைக் கொண்டு நகர்த்த முடியாது மக்கள் தவிக்கும் நேரத்தில் இவ்வாறான அடம்பரம் தேவையா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version