இலங்கை

நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

Published

on

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முடமாவடி சந்தியில் உயிரிழந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version