இலங்கை
போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் கைது!
போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சந்தேகநபர் ஒருவரே, குருவிட்ட பகுதியில் 960 போலி தங்க நாணயங்களுடன் கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் இன்று(19) நீதவான் நீதிமன்றில் முன்னிலைத்தப்படவுள்ளார்.
மேலும், போலி தங்க நாணயங்களை வழங்கியதாக கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login