இலங்கை

வடக்கில் காலூன்றும் சீனாவும், இந்தியாவும்!-

Published

on

சீனாவும், இந்தியாவும் வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம் எனவும் இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் எனவும் நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (17) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

சீனாவுடனும், இந்தியாவுடனும் இலங்கையானது சிறிமாவோ பண்டார நாயக்க காலப்பகுதியில் இருந்து நெருக்கமான உறவுகளைப் பேணுகின்றது. அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போதும் நடுநிலையாக செயற்பட்டது,

நாம் எந்த நாடுகளுக்கும் இலங்கையின் பகுதிகளை விற்கவில்லை. எந்த நாட்டுக்கும் சார்பாக செயற்படவும் இல்லை. அபிவிருத்தி செய்வதற்காக மட்டுமே இடங்களை வழங்கியுள்ளோம்.

இதனால் வடக்கு மக்கள் நன்மையடைவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version