இலங்கை

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கிய கலந்துரையாடல்: பேசப்போவது என்ன?

Published

on

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியன் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இச்சந்திப்பில் பங்கேற்பாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சிவாஜிலிங்கம் அணியினரும் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ் பேசும் சமூகத்தின் அரசியல் உரிமைகளுக்காக தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ரொலோவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version