இலங்கை

இராசாயன உரப்பாவனைக்கு அனுமதி

Published

on

அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது நாட்டில் இன்னும் பயன்படுத்தப்பட வேண்டிய எஞ்சிய இரசாயன உரங்கள் இதற்காக பயன்படுத்தப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக நுவரெலியா, பதுளை மற்றும் பண்டாரவளை புறநகர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திய உரங்கள் மழைநீரில் கழுவிச் செல்லப்பட்டடுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஒப்புக்கொண்டுள்ளதாக வீக்கெண்ட் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் காய்கறிகளின் விலை கடுமையாக உயரும் எனவும் தெரிவித்துள்ளார்.

உர இறக்குமதி நிறுவனங்களுக்கு சொந்தமான இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்கள் குறித்த அறிக்கையை தயாரிக்கவும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version